கடந்த 2014-ஆம் ஆண்டு மே மாதம், மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்த பிறகு பசுக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. இந்த நிலையில், மற்றொரு புறம், பசு பாதுகாவலர்கள் என்ற பெயரில் சில வன்முறையாளர்கள், பசுக்களை இறைச்சிக்காகக் கடத்திச் சென்றதாக சிலர் மீது தாக்குதல் நடத்தினர். இந்த பிரச்னையும் இன்றளவும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், பிஎஸ்பி உறுப்பினரான சுஷ்மா பட்டேல், கால்நடைமுகாம்களில் இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை எவ்வளவு என உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் கேள்வியெழுப்பினார். அதற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் லெட்சுமி நாராயணன் சவுத்திரி, 9,261 கால்நடைகள் கடந்த வருடம் உயிரிழந்தாகவும், அனைத்தும் இயற்கை காரணங்களால் உயிரிழந்ததால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று பதிலளித்தார்.