ஆங்கிலேயர்களிடமிருந்து இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன் 73 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி நாடு முழுவதும் இன்று சுதந்திர தினம் கொண்டாடப்பட்டுவருகிறது.
காந்தி நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் அஞ்சலி - 73-வதுசுந்திர தினம்
டெல்லி: 73ஆவது சுதந்திர தினத்தையொட்டி தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் பிரதமர் நரேந்திர மோடி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
![காந்தி நினைவிடத்தில் மலர் தூவி பிரதமர் அஞ்சலி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4139664-thumbnail-3x2-pm.jpg)
modi
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் அமைந்துள்ள தேசத் தந்தை மகாத்மா காந்தியின் நினைவிடமான ராஜ்காட்டிற்கு இன்று காலை சென்ற பிரதமர் நரேந்திர மோடி அங்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
காந்திக்கு அஞ்சலி செலுத்தும் பிரதமர் மோடி
இதையடுத்து, செங்கோட்டையில் நடைபெறவுள்ள சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றிவைத்து நாட்டு மக்களிடையே உரையாற்றிவருகிறார்.
Last Updated : Aug 15, 2019, 8:42 AM IST