தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

டெல்லி வன்முறை காவலர் உயிரிழப்பு: ஏழு பேர் கைது! - டெல்லி வன்முறையில் உயிரிழந்த தலைமை காவலர் ரத்தன் லால்

டெல்லி வன்முறையில் தலைமை காவலர் ரத்தன் லால் உயிரிழந்த வழக்கில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

7 held in connection with Head Constable Ratan Lal's murder case
7 held in connection with Head Constable Ratan Lal's murder case

By

Published : Mar 12, 2020, 11:23 PM IST

ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் பகுதியைச் சேர்ந்த ரத்தன் லால் என்பவர் டெல்லியில் தலைமைக் காவலராக பணியாற்றிவந்தார். அவர், கடந்த 24-ஆம் தேதி டெல்லியின் வடகிழக்கு பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வெடித்த வன்முறையில் உயிரிழந்தார்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் சிசிடிவி காட்சிகள் உதவியுடன் குற்றவாளிகளை தேடிவந்தனர். முன்னதாக இந்த வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில் இன்று ரத்தன் லால் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

இதையும் படிங்க...கொரோனா: ஸ்ரீநகர் கல்வி நிலையங்களுக்கு இன்று முதல் விடுமுறை

ABOUT THE AUTHOR

...view details