ஒடிசா மாநிலத்திலுள்ள பெர்ஹாம்பூர் மாவட்ட தொழிலாளர் அலுவலர், மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உறுப்பினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் (டி.சி.பி.ஓ), பெர்ஹாம்பூர் குழந்தைகள் இடர் உதவி அலுவலர், காவல் துறையினர் ஆகியோர் அடங்கிய பணிக்குழு பைத்யநாத்பூர் காவல் நிலைய எல்லைக்குள் உள்ள பல உணவு விடுதிளிலும் துரித உணவகங்களிலும் சோதனைகளை நடத்தினர். அப்போது சட்டத்திற்குப் புறம்பாக குழந்தைத் தொழிலாளர்கள் அங்கே பணிகளில் அமர்த்தப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக பெர்ஹாம்பூர் மாவட்ட தொழிலாளர் அலுவலர் பாபுலால் பத்ரா கூறுகையில், ”இந்தத் திடீர் சோதனையின்போது ஐந்து உணவகங்களிலிருந்து குழந்தைகள் மீட்கப்பட்டனர். குழந்தைகளின் வயது குறித்து நாங்கள் விசாரித்தபோது, அவர்களுக்கு 14 வயதுக்கும் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து, குழந்தைத் தொழிலாளர் (தடை மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தின் கீழ் அந்த உணவகங்களின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்துள்ளோம். அடுத்த சில நாள்களில் நகரின் பல்வேறு பகுதிகளில் சோதனைகளை மேற்கொள்ள இருக்கிறோம்” என்றார்.