தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2019, 10:51 PM IST

ETV Bharat / bharat

புதுச்சேரி இடைத்தேர்தலில் 69.44% வாக்குகள் பதிவு!

புதுச்சேரி: காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் 69.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

மாவட்ட ஆட்சியர் அருண்

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்தது. இந்த இடைத்தேர்தலில் 69.44 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து, வாக்கு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு ஆண்கள் பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண், முதுநிலை காவல் கண்காணிப்பாளர் ராகுல் அலுவால் ஆகியோர் காமராஜ் நகர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் பாதுகாப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனர். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாவட்ட ஆட்சியர் அருண், "காமராஜர் நகர் தொகுதியில் வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெற்றது. சட்டம் ஒழுங்குப் பிரச்னை ஏதும் ஏற்படவில்லை. கடந்த தேர்தலில் இதே தொகுதியில் 75 சதவிகித வாக்குகள் பதிவாகின. இம்முறை 69. 44 சதவிகித வாக்குகள் பதிவாகி உள்ளன. வாக்கு சதவீதம் குறைந்ததற்கான காரணங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும்" என்றார்.

தொடர்ந்து, "வரும் 24ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும். அன்று காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்கு எண்ணிக்கை மூன்று சுற்றுகளாக எண்ணப்படும். பகல் 12.30 மணியளவில் இடைத்தேர்தல் முடிவுகள் தெரிந்துவிடும்" என்றும் புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அருண் கூறினார்.

இதையும் படிங்க: தலைநிமிரவைத்த தமிழ்நாட்டு வாக்காளர்கள்!

ABOUT THE AUTHOR

...view details