உத்தரப் பிரதேச மாநிலம் முசாபர்நகர்-சஹாரன்பூர் நெடுஞ்சாலையில் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது, காலுலி சோதனைச்சாவடி அருகே பேருந்து ஒன்று வந்த வேகத்தில் அவர்கள் மீது மோதியது.
பேருந்து மோதியதில் 6 குடிபெயர்ந்த தொழிலாளிகள் உயிரிழப்பு - வழக்குப்பதிவு, விசாரணை

09:10 May 14
உத்தரப் பிரதேசத்தில் நடந்துசென்ற குடிபெயர்ந்த தொழிலாளர்கள் மீது பேருந்து ஏறியதில் ஆறு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதில் தூக்கிவீசப்பட்டு, ஆறு குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் மரணம் அடைந்தனர். இது குறித்து காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
காவலர்களின் முதல்கட்ட விசாரணையில், பேருந்து மோதி மரணித்த தொழிலாளர்கள் பிகாரின் கோபால்கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து காவலர்கள் தரப்பில் கூறுகையில், “விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்றார்.