கோவிட்19 வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக, இந்திய அரசு உலக நாடுகளுடனான விமானப் போக்குவரத்தைத் துண்டித்துள்ளது, கடந்த வாரம் முதல் சர்வதேச விமான போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளிலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் வழியாக டெல்லி திரும்ப இந்தியர்கள் ஆறு பேர் துபாய் சர்வதேச விமான நிலையம் வந்தனர்.
அப்போது அமீரகம்-டெல்லி இடையே அனைத்து விமானப் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனால் விமான நிலையத்திலேயே கடந்த நான்கு நாள்களாகத் தவித்துவருகின்றனர். அவர்களில் மூன்று பேர் பஞ்சாப் மாநிலத்தையும், மற்றவர்கள் ராஜஸ்தான், டெல்லி, இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள்.