உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் இன்று (ஆகஸ்ட் 26) அதிகாலை லக்னோவிலிருந்து ஹார்டோய்க்கு ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேபோல், மற்றொரு பேருந்து ஹார்டோயிலிருந்து தலைநகர் லக்னோவிற்கு வந்து கொண்டிருந்தது.
இந்த இரண்டு பேருந்துகளும் லக்னோ-ஹார்டோய் சாலையில் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இதில் ஆறு பேர் உயிரிழந்தனர். மேலும், பன்னிரெண்டு பேர் காயமடைந்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பிவைத்துள்ளனர். இறந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.