தமிழ்நாடு

tamil nadu

By

Published : Sep 9, 2020, 12:50 PM IST

ETV Bharat / bharat

காணாமல்போன இந்திய வீரர்கள் மீட்பு!

திஸ்பூர்: இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியின் அருகே காணாமல் போனதாகக் கருதப்பட்ட ஐந்து வீரர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.

5-hunters-who-went-missing-from-indian-side-of-lac-traced-army
5-hunters-who-went-missing-from-indian-side-of-lac-traced-army

இந்திய - சீன எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியின் அருகே அப்பர் சுபன்சிரி பகுதியில், கடந்த இரண்டாம் தேதி இந்திய வீரர்கள் ஐந்து பேர் காணாமல் பேனதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், சீன எல்லைப் பகுதியில் வழி தவறி வீரர்கள் வந்ததாகக் தகவல் கிடைத்ததையடுத்து, நேற்று(செப்.8) வீரர்கள் மீட்கப்பட்டனர்.

இதுகுறித்து, திஸ்பூர் பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “ கடந்த இரண்டாம் தேதி இந்திய-சீன எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியான அப்பர் சுபன்சிரியிலிருந்து வழிதவறி சென்று காணாமல் போயினர். பின்னர் இவர்கள் சீன எல்லையருகே இருப்பதை சீன ராணுவம் உறுதி செய்தது. இதையடுத்து வீரர்கள் அனைவரும் நேற்று (செப்.8) இந்தியாவிற்கு அழைத்துவரப்பட்டனர்” என்றார்.

ABOUT THE AUTHOR

...view details