ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு சட்டப்பிரிவு 370ஐ மத்திய அரசு நீக்கியபோது, அம்மாநில மக்களுக்கான அலைபேசி, தொலைபேசி, இணையதளம் ஆகிய சேவைகள் முழுவதும் முடக்கப்பட்டது.
இந்நிலையில் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு பின் ஜம்மு - காஷ்மீரின் இரு மாவட்டங்களுக்கு 4ஜி சேவையை சோதனை அடிப்படையில் வழங்க யூனியன் பிரதேச முதன்மை செயலாளர் ஷலீன் கப்ரா உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட உத்தரவில், '' ஜம்மு - காஷ்மீரின் உதம்பூர், கந்தர்பல் ஆகிய மாவட்டங்களுக்கு சோதனை அடிப்படையில் அதிவேக 4ஜி சேவை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏனைய மாநிலங்களுக்கு வழக்கம்போல் 2ஜி இணையதள சேவையே தொடரும்'' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.