தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

கரோனாவிலிருந்து மீண்ட எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள்!

டெல்லி: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் 44 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

கரோனாவைலிருந்து மீண்டு வந்த 44 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்
கரோனாவைலிருந்து மீண்டு வந்த 44 எல்லை பாதுகாப்பு படை வீரர்கள்

By

Published : May 19, 2020, 10:01 AM IST

கரோனா தொற்றால் எல்லை பாதுகாப்புப் படையினர் (பி.எஸ்.எஃப்) பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 44 (டெல்லி - 22, திரிபுரா -22) வீரர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர்.

இதுவரை 192 எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் கரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். மேலும், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின் எண்ணிக்கை தற்போது 163ஆக இருப்பதால், அவர்கள் அனைவரையும் கரோனாவிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளை மருவத்துவர்கள் தீவிரமாக மேற்கொண்டுவருகின்றனர்.

இதற்கிடையில், மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படை வீரர்கள் (சி.ஐ.எஸ்.எஃப்) இருவருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சுமார் 1 லட்சத்து 62 ஆயிரம் வீரர்களில் 114 வீரர்களுக்கு தற்போது வரை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: கரோனா அறிகுறியை முன்பே அறியும் ட்ராக்கர்: சென்னை ஐஐடி கண்டுபிடிப்பு

ABOUT THE AUTHOR

...view details