தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 21, 2020, 5:19 PM IST

ETV Bharat / bharat

கரோனாவுக்கு எதிரான போரில் எத்தனை காவலர்கள் உயிரிழந்தார்கள்? - பதிலளிக்கிறார் அமித் ஷா

டெல்லி: கரோனாவுக்கு எதிரான போரின்போது, நாட்டை காக்கும் பணியிலிருந்த 343 காவலர்கள் தங்கள் உயிரினை தியாகம் செய்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

அமித் ஷா
அமித் ஷா

கரோனா காலத்தில் பல்வேறு தரப்பினர் இன்னலுக்கு உள்ளான நிலையில், மருத்துவர்கள், காவலர்கள், பத்திரிகையாளர்கள் உள்ளிட்டோர் கரோனா முன்களப் பணியாளர்களாக நாட்டை காக்கும் பொருட்டு போராடினர்.

இந்தக் காலக்கட்டத்தில், 343 காவலர்கள் தங்கள் உயிரினை தியாகம் செய்ததாக மத்திய உள் துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

டெல்லியில் அமைந்துள்ள தேசிய காவலர் நினைவிடத்திற்குச் சென்ற அமித் ஷா, பணியிலிருக்கும்போது உயிர் தியாகம் செய்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தினார். காவலர் வீர வணக்கம் நாளை முன்னிட்டு நடைபெற்ற அணிவகுப்பினை ஏற்றுக் கொண்ட அவர், "இது கல் மற்றும் மண்ணால் கட்டப்பட்ட நினைவுச்சின்னம் மட்டும் அல்ல என்பதை காவல் துறையினரின் குடும்பத்தாருக்குத் தெரிவிக்க விரும்புகிறேன்.

அவர்கள் சிந்திய ரத்தம் நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் சென்றுள்ளது. நாட்டு மக்கள் நிம்மதியாகத் தூங்குவதற்கு காவலர்களே காரணம். கரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய தாக்கத்தை உலகம் முதன்முதலாகச் சந்தித்தது. முன்களத்திலிருந்து கரோனாவுக்கு எதிராகப் போராடியவர்கள் காவலர்களே. பிரதமர் உள்பட ஒட்டுமொத்த நாடும் அவர்களைப் பாராட்டியது" என்றார்.

பணியிலிருக்கும்போது 35,398 காவலர்கள் உயிரிழந்துள்ளதாகவும் கரோனாவுக்கு எதிரான போரில் 343 காவலர்கள் உயிரிழந்ததாகவும் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: நாளை சுற்றுச்சூழல் நிலைக்குழுக் கூட்டம்: காற்று மாசுபாடு குறித்து விவாதிக்கவுள்ளதாக தகவல்

ABOUT THE AUTHOR

...view details