தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு: பாதுகாப்பு வளையத்துக்குள் பல்லவ நகரம் - மாமல்லபுரத்தில் நரேந்திர மோடி, ஜி ஜிங்பிங் சந்திப்பு

சென்னை: இந்திய பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் தமிழ்நாட்டின் மாமல்லபுரம் கடற்கரை நகரில் சந்தித்து இருநாட்டு உறவுகளை வலுப்படுத்துவது குறித்து விவாதிக்கவுள்ளனர். இதையொட்டி அப்பகுதி முழுவதும் உச்சகட்ட பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

Narendra Modi

By

Published : Oct 5, 2019, 9:47 AM IST

மாமல்லபுரத்தில் இருநாட்டுத் தலைவர்கள் சந்திப்பு

சீன அதிபர் ஷி ஜின்பிங் இரண்டு நாள் பயணமான இந்தியா வருகிறார். அப்போது பாரத பிரதமர் நரேந்திர மோடியை தமிழ்நாட்டின் பாரம்பரிய கடற்கரை நகரமான மாமல்லபுரத்தில் சந்திக்கிறார். இந்தச் சந்திப்பு வருகிற 11ஆம் தேதி நடக்கிறது.

இரு நாட்டுத் தலைவர்களும் மாமல்லபுரத்தில் சிறிது தூரம் நடந்து செல்கின்றனர். மேலும் ஐந்து ரதம் அருகே அமர்ந்து புகைப்படம் எடுக்கவுள்ளனர். இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பல்லவ நகரமும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் விவகாரம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு சிறப்புத் தகுதி வழங்கிய சட்டப்பிரிவு 370, 35 ஏ ஆகஸ்ட் 5ஆம் தேதி நீக்கப்பட்டது. இதையடுத்து, அம்மாநிலம் காஷ்மீர், லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. காஷ்மீரை பாகிஸ்தானும் லடாக்கை சீனாவும் உரிமை கொண்டாடிவருவது தனிக்கதை.

இந்தச் சூழலில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை சீன அதிபர் ஷி ஜின்பிங் வரும் 8ஆம் சந்தித்துப் பேசவுள்ளார். அப்போது, மேலே குறிப்பிட்ட இரண்டு இடங்கள் குறித்த பிரச்னையை எவ்வாறு எதிர்கொள்வது, பரஸ்பர உறவு குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசிக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீன நிலைப்பாடு

பாகிஸ்தானுக்கு ஆதரவாகவே சீனாவின் செயல்பாடுகள் உள்ளது என்பது யாவரும் அறிந்ததே. இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, சந்தித்த கையோடு ஷி ஜின்பிங் இந்தியா வருவது சர்வதேச அரசியல் அரங்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

சீனாவோடு வர்த்தகப் போரில் ஈடுபட்டுவரும் அமெரிக்காவுடன் இந்தியா நெருங்கிய உறவைக் கொண்டுள்ளது என்பது கவனிக்கத்தக்கது.

வர்த்தக நண்பர்கள்

இருப்பினும் சீனாவையும் இந்தியா கைவிடவில்லை. இரு நாடுகளுக்கும் இடையே சீரான வர்த்தக உறவு இருந்துவருவது இருநாட்டு உறவை சிதைக்கவிடாமால் காக்கிறது.

ஆக, சீனாவுடன் இந்திய தோழன் அமெரிக்கா வர்த்தகத்தில் பகைமைப் பாராட்டி வந்தாலும், இந்தியா காட்டும் வர்த்தகப் பாசத்தால் இந்தியாவும் சீனாவும் உலக நாடுகளுக்கு நாங்கள் என்றுமே வர்த்தக நண்பர்கள்தான் என்பதை உணர்த்துகிறது.

இதனைச் சுட்டிக் காட்டுவதுப் போல்தான் இந்த மாமல்லபுரம் சந்திப்பும் அமையப் போகிறது என்பது பலரது கருத்தாக உள்ளது. அதேபோல் லடாக் பிரச்னையை அப்படியே கிடப்பில் போடவைக்கவும் காஷ்மீர் விவகாரத்தில் சீன மென்மைப் போக்கை கடைப்பிடிப்பதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை நரேந்திர மோடி மேற்கொள்வார் என சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

சீனாவுக்கும் மாமல்லபுரத்துக்கும் உள்ள சிறப்பும்...தொடர்பும்...!

சீனா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கலாசார மையப்புள்ளியாக மாமல்லபுரம் திகழ்கிறது. நான்காம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிற்குள் கால்பதித்த பல்லவர்கள், சமஸ்கிருதத்தைக் காட்டிலும் தமிழுக்கு முக்கியத்துவம் அளித்தனர்.

பல்லவர்கள் கிரகந்தம் என்ற எழுத்துகளை உருவாக்கி ஆசிய நாடுகளுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டனர். இவ்வாறான சிறப்புவாய்ந்த தமிழ்நாட்டுக்கு சீன அதிபர் வருகை தரவுள்ளார். இருநாட்டுத் தலைவர்களின் சந்திப்பு சீனாவுக்கும் மாமல்லபுரத்துக்குமான தொடர்பை பலப்படுத்தும் என்று நம்பலாம்.

இதையும் படிங்க

பிரதமர் வருகையால் புதுப்பொலிவு பெறும் மாமல்லபுரம்!

ABOUT THE AUTHOR

...view details