அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் மருத்துவர் தேபன் தத்தா. தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து வந்த தொழிலாளிக்கு இவர் தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி, தொழிலாளர் இறந்ததை காரணம் காட்டி மருத்துவர் தத்தாவை கும்பல் ஒன்று படுகொலை செய்தது.
இது நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்த, பல மருத்துவர்கள் தங்களின் கண்டனத்தை தெரிவித்தனர். இது குறித்த வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.