தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

உத்தரப் பிரதேசத்தில் இரண்டு லாரிகள் மோதி விபத்து; 24 பேர் உயிரிழப்பு - இரண்டு லாரிகள் மோதி விபத்து

லக்னோ: அவுரியாவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் 24 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

24 பேர் உயிரிழப்பு
24 பேர் உயிரிழப்பு

By

Published : May 16, 2020, 7:42 AM IST

Updated : May 16, 2020, 8:32 AM IST

உத்தரப் பிரதேச மாநிலம் அவுரியாவில் இன்று அதிகாலை 3:30 மணியளவில் இரண்டு லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த விபத்தில் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 22 பேர் படுகாயமடைந்துள்ளனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அப்பகுதி காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

மீட்புப் பணியின் போது

முதற்கட்ட விசாரணையில் லாரியில் சென்றவர்கள் பெரும்பாலானோர் பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களைச் சேர்ந்த புலம் பெயர்ந்த கூலித் தொழிலாளர்கள் என்பது தெரியவந்துள்ளது. அவர்களை ஏற்றிவந்த லாரி ராஜஸ்தானிலிருந்து அவுரியாவுக்கு சென்றுக்கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழந்துள்ளது. மேலும், படுகாயமடைந்த 22 பேரில் 15 பேரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

மீட்புப் பணியின் போது

இந்த நிலையில் அவுரியாவில் நடந்த இந்த விபத்து குறித்து அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:உத்தரப் பிரதேசம் செல்ல முயன்ற 40 தொழிலாளர்கள் மீட்பு!

Last Updated : May 16, 2020, 8:32 AM IST

ABOUT THE AUTHOR

...view details