தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

‘கட்டட தொழிலாளர்கக்கு ரூ. 2000 வழங்கப்படும்’- முதலமைச்சர் - புதுச்சேரியில் ‘கட்டிட தொழிலாளர்கக்கு ரூ:2000 வழங்கப்படும்’- முதலமைச்சர் நாரயணசாமி

புதுச்சேரி: கட்டட தொழிலாளர்களின் குடும்ப அட்டைக்கு இரண்டாயிரம் ரூபாயும், அமைப்பு சாரா தொழிலாளர் குடும்பத்திற்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அறிவித்தார்.

செய்தியாளர்களை சந்தித்த நாரயணசாமி
செய்தியாளர்களை சந்தித்த நாரயணசாமி

By

Published : Apr 21, 2020, 3:20 PM IST

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஊரடங்கு உத்தரவை புதுச்சேரியில் கடுமைப்படுத்தியுள்ளோம். விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.

விவசாயிகள் தங்கள் விளை பொருள்களை எடுத்துச்செல்ல எந்தத் தடையும் இல்லை. மேலும், கட்டட தொழிலாளர்கள் குடும்ப அட்டைக்கு இரண்டாயிரம் ரூபாயும், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.

புதுச்சேரி அரசு நிதி நெருக்கடியில் இருக்கிறது. ஊரடங்கு வரி வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால், மத்திய அரசு உதவ வேண்டும். ஏழைகளின் பசியைப் போக்க அரிசி கொடுத்தால் மட்டும் போதாது நிதி வழங்க வேண்டும்.

இந்த நோய் தொற்றால் புதுச்சேரி பொருளாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையை சரிசெய்ய பல மாதங்கள் ஆகும். மத்திய அரசு உதவினால் மட்டுமே பொருளாதார பாதிப்பு சரியாகும்.

செய்தியாளர்களைச் சந்தித்த நாரயணசாமி

புதுச்சேரியில் ஊரடங்கு தளர்வு சம்பந்தமாக 250 தொழிற்சாலைகள் திறக்க மனு வந்துள்ளது. இதுவரை ஒன்றுக்குக்கூட அனுமதி வழங்கப்படவில்லை. அரசின் கடுமையான விதிகளை பின்பற்றினால்தான் தொழிற்சாலைகள் அனுமதிக்கப்படும்” என்றார்.

இதையும் படிங்க: கரோனா உதவித்தொகையாக ரூ. 2,000 - நாராயணசாமி அறிவிப்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details