ஜம்மு-காஷ்மீர் எல்லையில் அமைந்துள்ள அக்னூர் செக்டாருக்கு உட்பட்ட கவுர், பலன்வாலா பகுதிகளில் நள்ளிரவு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினர் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து, இந்திய பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். பலமணி நேரம் நடைபெற்ற இந்தத் துப்பாக்கிச் சண்டையில் பாகிஸ்தானைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இந்திய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் தேவேந்திர ஆனந்த், "அக்னூர் செக்டாரில் போர் நிறுத்த விதிகளை மீறி நள்ளிரவு இந்திய பாதுகாப்புப் படையினர் மீது பாகிஸ்தான் பாதுகாப்புப் படை தாக்குதல் நடத்தியது.