தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 8, 2020, 11:09 AM IST

ETV Bharat / bharat

பயிற்சியின்போது நிகழ்ந்த பரிதாபம்: ஒடிசாவில் தமிழ் பெண் விமானி பலி

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பிராசல் பகுதியில் பயிற்சியின்போது விமானம் விபத்துக்குள்ளானதில் பெண் விமானி உயிரிழந்தார்.

odisha
odisha

ஒடிசா மாநிலம் தீன்கனல் பகுதியில் உள்ள அரசு விமான பயிற்சி மையத்தில் இன்று அதிகாலை விமானம் ஒன்று விபத்துக்குள்ளானது. இதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிஷ் பாத்திமா என்ற பயிற்சி பெண் விமானி உயிரிழந்தார்.

தினமும் அதிகாலை இந்தப் பயிற்சித் தளத்தில் விமானிகள் சிறிது நேரம் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். பிகாரைச் சேர்ந்த மூத்த விமானியான சஞ்சய் ஜாவும், பயிற்சி விமானியான அனிஷ் பாத்திமாவும் வழக்கமான பயிற்சி மேற்கொள்ள விமான தளத்திற்கு வந்துள்ளனர்.

அப்போது, விமானம் மேலே சென்ற சில நிமிடங்களிலேயே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், இரு விமானிகளும் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

பலியான பெண் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்ற விவரம் மட்டுமே தற்போது தெரிந்துள்ள நிலையில், கூடுதல் தகவல்கள் விசாரிக்கப்பட்டுவருகின்றன.

இதையும் படிங்க:தேர்வுத் துறை இயக்குநர் அலுவலகத்தில் ஐவருக்கு கரோனா!

ABOUT THE AUTHOR

...view details