தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

சிறுமி பாலியல் வன்கொடுமை: பாஜக வேட்பாளர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார்! - west bengal 17 year sexually assault

கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம்சாட்டப்பட்ட பாஜக வேட்பாளர் நிலன்ஜன் ராய் மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், சிறுமி சார்பாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில் சிறுமியை பாலியல் துன்பருத்தல் செய்த பாஜக வேட்பாளர்

By

Published : May 11, 2019, 7:21 PM IST

மேற்கு வங்க மாநிலம், டைமன் ஹார்பர் தொகுதிக்கு வரும் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அந்த தொகுதியின் பாஜக வேட்பாளர் நிலன்ஜன் ராய், கடந்த ஏப்ரல் 26ஆம் தேதி அன்று 17 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக சிறுமியிடம் நடத்தப்பட்ட மருத்துவ பறிசோதனையில், அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது. அந்த ஆதரங்களைக் கொண்டு காவல்துறையினரிடம் சிறுமியின் தந்தை புகார் தெரிவித்திருந்தும், நிலன்ஜன் ராய் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அம்மாநில சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் தலைவர் அனன்யா சட்டர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சம்பவம் குறித்து தேர்தல் ஆணையத்தில், நிலன்ஜன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிறுவர்கள் பாதுகாப்பு உரிமை ஆணையத்தின் சார்பாக புகார் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக மேற்கு வங்க மாநில பாஜக துணை தலைவர் ஜெயப்பிரகாஷ் கூறுகையில், டைமன் ஹார்பர் தொகுதிக்குஇன்னும் ஒரு வாரத்தில்மக்கள்வைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், நிலன்ஜன் ராய் மீது வீண் அவதூறுகள் பரப்பப்பட்டு கலங்கம் விலைவிக்கும் நோக்கில், திரிணாமுல் காங்கிரஸ் தான் இது போன்ற இழிவான செயல்களில் ஈடுப்பட்டு வருகின்றது என்று விளக்கம் கொடுத்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details