உத்தர பிரதேசம் மாநிலம் முஷாபர்நகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ராகேஷ் - தீயா தம்பதியினர். இவர்களுக்கு ஷீலா (16) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற மகள் உள்ளார். இந்நிலையில், கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த 16ஆம் தேதி ஷீலா தனது தோழியை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது, அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவர் ஷீலாவை கடத்தி பாலியல் வன்புணர்வு செய்துள்ளார். இது குறித்து ஷீலாவின் பெற்றோர் முஷாபர்நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.