தமிழ்நாடு

tamil nadu

உ.பி.சிறையில் 128 பேருக்கு கரோனா தொற்று!

By

Published : Jul 24, 2020, 12:24 PM IST

லக்னோ: உத்திரப் பிரதேசம் மாநிலம் ஜான்சி மாவட்ட சிறையிலுள்ள 748 கைதிகளில் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதியான சம்பவம் மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

UP COVID news  Jhansi district jail  Jail inmates test positive  உபி சிறை  உத்தரப்பிரதேச சிறை  கைதிகளுக்கு கரோனா
உ.பி. சிறையில் 128 பேருக்கு கரோனா தொற்று உறுதி

உத்திரப் பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்திலுள்ள மாவட்ட சிறையில் 128 கைதிகளுக்கு கரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்து சிறையில் ஒரு குறிப்பிட்ட பகுதி கோவிட்-19 முதல் நிலை மருத்துவமனையாக மாற்றப்பட்டுள்ளது. தொற்று உறுதியான 128 பேரில் 126 பேருக்கு கரோனா தொற்று அறிகுறி தென்படவில்லையென்றும் இரண்டு பேருக்கு மட்டுமே அறிகுறி தென்பட்டதாகவும் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

128 பேருக்கு தொற்று உறுதியானதை தொடர்ந்து பேசிய மாவட்ட நீதிபதி, "சிறையின் ஒரு பகுதி கோவிட்-19 முதல் நிலை மருத்துவமனையாக மாற்றப்பட்டு அங்கு தொற்று பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு சிகிச்சை அளிக்க சுழற்சி முறையில் மூன்று மருத்துவர் குழு செல்கிறது. தேவைப்பட்டால் நோயாளிகளை ஜான்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்புவோம்" எனத் தெரிவித்துள்ளார்.

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சிறையில் சுகாதார நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவேண்டும் என்று அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

சிறையில் கடந்த 9ஆம் தேதி கரோனா அறிகுறியுடன் இருந்த 2 கைதிகளுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட பின்பு மேற்கொள்ளப்பட்ட ரேபிட் சோதனையில், 126 பேருக்கு தொற்று உறுதியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:6 உலக மொழிகள், 22 இந்திய மொழிகளில் பிரதமரின் இணையதளம்

ABOUT THE AUTHOR

...view details