இந்தியாவில் கரோனா பரவல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதனால் பிற நாடுகளுக்குச் சென்றிருந்து இந்தியர்கள் தாயகம் திரும்பமுடியாமல் தவித்தனர்.
இதனையடுத்து வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு மும்முரம் காட்டிவருகிறது. அதன் ஒருகட்டமாக, பஹ்ரைனில் சிக்கித்தவித்த 127 இந்தியர்கள் சிறப்பு கல்ஃப் ஏர் விமானம் மூலம் கொச்சி விமான நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டனர்.
அதன் பிறகு அவர்கள் அனைவரும் விமான நிலையத்திலிருந்து கேரளா அரசின் சிறப்பு பேருந்துகள் மூலம் கொச்சி கடற்படை தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கு உள்ள பள்ளி ஒன்றில் 14 நாள்கள் தனிமைப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளனர்.