தமிழ்நாடு

tamil nadu

By

Published : Mar 14, 2020, 5:31 PM IST

ETV Bharat / bharat

ஹரியானாவில் ஒரு வயது குழந்தைக்கு கொரோனாவா?

ஃபதேஹாபாத்: ஹரியானாவில் ஒரு வயது குழந்தைக்கு கோவிட்-19 வைரஸ் தொற்று இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ஒரு வயது குழந்தைக்கும் கோவைட் -19?
ஒரு வயது குழந்தைக்கும் கோவைட் -19?

சீனாவின் வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) வைரஸ் 90க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. இந்த நோய் காரணமாக உலகளவில் இதுவரை நான்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் இருவர் உயிரிழந்துள்ளனர். மேலும் 16 வெளிநாட்டவர்களுக்கும், 65 இந்தியர்களுக்கும் கோவிட் -19 வைரஸ் தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதில் ஹரியானாவில் மட்டும் 14 பேருக்கு கோவிட் -19 வைரஸ் பாதிப்புள்ளது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் கடந்த 1ஆம் தேதி இத்தாலியிலிருந்து வந்த ஒரு வயது குழந்தைக்கு கோவிட்-19 வைரஸ் அறிகுறி இருந்துள்ளது. அக்குழந்தை மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தற்போது குழந்தையின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான முடிவு இன்னும் மூன்று நாள்களில் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க...சுமார் ரூ.7,700 கோடி செலவில் 780 கி.மீ. பசுமை சாலை!

ABOUT THE AUTHOR

...view details