தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

இனி அலுவலகத்தில் 30 நிமிடம் தூங்கலாம்... அதிரடி அறிவிப்பு... - wakefit mattress company

பெங்களூருவில் ஸ்டார்ட்-அப் நிறுவனமொன்று தனது ஊழியர்களுக்கு மதிய நேரத்தில் தூங்கிக்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

Bengaluru Company Announces 30 Minute Nap Break For Employees
Bengaluru Company Announces 30 Minute Nap Break For Employees

By

Published : May 9, 2022, 10:20 AM IST

பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த ‘வேக் பிட்’ என்ற தலையனை, மெத்தை தயாரிப்பு நிறுவனம், தனது ஊழியர்களுக்கு மதிய நேரத்தில் தூங்கிக்கொள்ள அதிகாரப்பூர்வமாக அனுமதி அளித்துள்ளது. அதன்படி ஊழியர்கள் மதியம் 2 முதல் 2:30 மணி வரை அலுவலகத்திலேயே தூக்கிக்கொள்ளலாம்.

இதற்காக படுக்கை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து அந்த நிறுவனம் தரப்பில், "நாசாவின் சமீபத்தைய ஆராய்ச்சியில், 26 நிமிட குட்டித் தூக்கம் உடல் செயல்திறனை 33 விழுக்காடு அதிகரிக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், எங்கள் பணியாளர்களுக்கு உத்தியோகபூர்வ தூக்க நேரத்தை அறிவித்துள்ளோம். இந்த முயற்சியால் எங்கள் ஊழியர்கள் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் ஆரோக்கியமாக, உற்சாகமாக பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்" எனத் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:சொமேட்டோவின் CEO நிறுவன ஊழியர்களுக்கு கொடுத்த அன்புப் பரிசு

ABOUT THE AUTHOR

...view details