தமிழ்நாடு

tamil nadu

By

Published : Apr 7, 2021, 9:15 PM IST

ETV Bharat / bharat

மேற்குவங்க பாஜக தலைவர் கான்வாய் மீது தாக்குதல்!

மேற்குவங்க பாஜக தலைவர் திலீப் கோஷ் கான்வாய் மீது கூச் பெஹர் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Dilip Ghosh
Dilip Ghosh

மேற்குவங்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் எட்டு கட்டமாக நடைபெற்றுவருகிறது. அங்கு ஆளும் திரிணாமுல் காங்கிரஸ், பாஜக இடையே கடும் போட்டி நிலவிவருகிறது. முதல் மூன்று கட்ட வாக்குப்பதிவு இதுவரை நடைபெற்ற நிலையில், அடுத்த கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னர் இரு தரப்பினரும் தீவிர பரப்புரையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில், கூச் பெஹர் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், காரில் பயணம் மேற்கொண்டார். அப்போது அவரது கான்வாய் மீது திடீரென தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், திலீப் கோஷின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.

திலீப் கோஷ் கான்வாய் மீது தாக்குதல்

இந்த சம்பவத்திற்குப் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ்தான் உள்ளது என திலீப் கோஷ் குற்றஞ்சாட்டியுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து உரிய விசாரணை நடைபெறும் என, அம்மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:ஐ.என்.எக்ஸ். மீடியா வழக்கு: நேரில் ஆஜராக சிதம்பரத்துக்கு விலக்கு

ABOUT THE AUTHOR

...view details