தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

பிராமி மூலிகையின் மருத்துவ நன்மைகள்! - Ayurvedic doctor Rajyalakshmi Madhavam,

ஆயுர்வேதத்தில் மிகவும் சிறந்த மூலிகையாகவும் பாதுகாப்பான மூலிகையாகவும் கருதப்படும் பிராமி மூலிகையின் நன்மைகள் குறித்து நம்முடன் விவரிக்கிறார் ஆயுர்வேத மருத்துவர் ராஜ்யலட்சுமி.

brah
brahmi

By

Published : Nov 18, 2020, 7:57 PM IST

உலகம் ஒரு தொற்றுநோயைக் கடந்து சென்றுகொண்டிருக்கிறது. இது, மக்களின் மன ஆரோக்கியத்தை பெரிதும் பாதித்துள்ளது. உலகெங்கிலும் உள்ள ஏராளமான மக்கள் மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் அனுபவித்துவருகின்றனர்,

இதன் காரணமாக அவர்களின் அன்றாட நடவடிக்கைகள் தடைபடுகின்றன. மன அழுத்தத்தை குறைக்க மற்றும் மூளையின் செயல்பாடுகளை அதிகரிக்க பல மருந்துகள் மற்றும் சிகிச்சைகள் உள்ளன. ஆயுர்வேதத்திலும், தேவைக்கு உதவும் பல மூலிகைகள் உள்ளன், அவற்றில் ஒன்றுதான் பிராமி.

கிருபையின் மூலிகை என்று அழைக்கப்படும் பிராமி பாரம்பரிய ஆயுர்வேத மருத்துவத்தில் ஒரு முக்கியமான தாவரமாகும். இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்காக ஹைதராபாத்தின் ஏ.எம்.டி ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ராஜ்யலட்சுமி மாதவத்துவை அணுகினோம்.

அவர் கூறுகையில், பிராமி மூலிகை அனைத்து உளவியல் பிரச்னைகளிலும் உதவியாக உள்ளது என்றார். இதுமட்டுமின்றி 7 மருத்துவ குணங்கள் குறித்தும் எடுத்துரைத்தார்.

நினைவாற்றல் அதிகரிப்பு:ஒருவரின் நினைவாற்றலை மேம்படுத்துவதில் பிராமி திறம்பட செயல்படுகிறது. இது சிறந்த கற்றல் திறன்களையும் ஊக்குவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும், மூளையில் ஆற்றலை அதிகரித்து கவனத்தை அதிகப்படுத்துகிறது.

அல்சைமர்: நரம்பியல் பிரச்சினைகளான அல்சைமர் போன்ற சீரழிந்த நரம்பியல் சிக்கல்களுக்கும், பயனுள்ள மூளை செல்களை மீண்டும் உருவாக்கவும் பிராமி உதவுகிறது.

மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் குறைக்கிறது:

நிச்சயமற்ற எதிர்காலம் இருக்கும்போது கவலை, பயம், மன அழுத்தம் போன்ற உணர்வுகள் பொதுவானவை. இவை அனைத்தும் ஒருவரின் மன ஆரோக்கியத்தை சீரழிப்பது மட்டுமல்லாமல், அவரது / அவள் உடல் ஆரோக்கியத்தையும் பெரிதும் பாதிக்கும். உடலில் உள்ள கார்டிசோல் அல்லது ஸ்ட்ரெஸ் ஹார்மோனின் அளவைக் குறைப்பதன் மூலம், மன அழுத்தத்தையும் பதற்றத்தையும் தக்க வைத்துக் கொள்ள மூலிகை உதவுகிறது.

தூக்கமின்மை சரிசெய்தல்: சோர்வான நாள் காரணமாக தூங்குவது மிகவும் கடினமான செயல் ஆகும்.மனதை அமைதிப்படுத்தவும், நிதானமாகவும், தரமான தூக்கத்திற்கு பிராமி உதவுகிறது.

நீரிழிவு நோய்: ஆராய்ச்சிகள் பிராமியை நீரிழிவு எதிர்ப்பு மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று காட்டுகின்றன. உடலில் இரத்த சர்க்கரை அளவை சீராக்க பிராமிகள் பயன்பாடுகள் இருக்கும்.

ஆன்டிஆக்சிடன்ட்: பிராமி ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டுள்ளது, இது உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராக பாதுகாக்க உதவுகிறது, மேலும், குழந்தைகளில் ஏ.டி.எச்.டி அறிகுறிகளைத் தணிப்பதிலும் இது பயனுள்ளதாக இருக்கும்.

பிராமி மூலகை எப்படி எடுக்கலாம்:

பிராமி வதி (மாத்திரைகள்), பிராமி சுர்ணா (தூள்) மற்றும் பிராமி தைலா (எண்ணெய்) வடிவில் கிடைக்கிறது. ஆயுர்வேதத்தில் பாதுகாப்பான மூலிகைகளில் பிராமி ஒன்றாகும், ஆனால் அளவைப் புரிந்து கொள்ள, ஒரு ஆயுர்வேத நிபுணரிடம் கலந்துரையாடுவது நல்லது. பல தீர்க்க முடியாத நோய்கள் ஆயுர்வேத மருந்துகள் உபயோகத்தை பார்த்திட முடியும்.

ABOUT THE AUTHOR

...view details