தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

புதிய முயற்சியாக "தேங்காய் ஊறுகாய்" தயாரிப்பு - மக்களிடம் வரவேற்பு! - தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் தேங்காய் ஊறுகாய் தயாரிப்பு

தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் புதிய முயற்சியாக தேங்காய் ஊறுகாய் தயாரிக்கப்பட்டு வருகிறது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Kannada
Kannada

By

Published : Jul 19, 2022, 9:37 PM IST

மங்களூரு: ஊறுகாய் என்றால் நம் அனைவருக்கும் நினைவில் வருவது, எலுமிச்சை, மாங்காய், தக்காளி, பூண்டு உள்ளிட்டவைதான். தற்போது சில காய்கறிகளிலும் ஊறுகாய் தயாரிக்கிறார்கள். ஆனால், கர்நாடகாவின் தக்‌ஷின கன்னடா மாவட்டத்தில் புதிய முயற்சியாக தேங்காய் ஊறுகாய் தயாரிக்க தொடங்கியுள்ளனர்.

அம்மாவட்டத்தில் உள்ள தென்னை விவசாயிகள் உற்பத்தியாளர் கூட்டமைப்பு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது. தென்னையிலிருந்து ஒரு மதிப்புகூட்டு பொருளாக ஊறுகாயை தயாரிக்கின்றனர்.

இதில் பூண்டு சேர்த்தும், சேர்க்காமலும் இரண்டு வகையாக ஊறுகாய் தயாரிக்கின்றனர். இதனை ஆறு மாதங்கள் வரை பயன்படுத்தலாம் என தெரிகிறது. இந்த தேங்காய் ஊறுகாயின் 250 கிராம் பாக்கெட் தற்போது சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால், உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளனர்.

இதையும் படிங்க:கிளியை கண்டுபிடித்தால் ரூ.50 ஆயிரம் பரிசு... எந்த கிளி தெரியுமா...?

ABOUT THE AUTHOR

...view details