பெங்களூரு:கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள கல்யாண் நகரில் இருந்து ஹெச்.ஆர்.பி.ஆர் லேஅவுட் செல்லும் சாலையில் உள்ள நகவாரா என்ற இடத்தில் கட்டப்பட்டு வரும் மெட்ரோ ரயில் தூண் நேற்று (ஜன.10) காலை திடீரென சரிந்து பிரதான சாலையில் விழுந்து விபத்துக்குள்ளானது. அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் மீது தூண் விழுந்த நிலையில், தேஜஸ்வி மற்றும் அவரது இரண்டரை வயது மகன் உயிரிழந்தனர்.
அவர்களுக்கு 20 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று கர்நாடக முதலமைச்சர் பசவராஜ் பொம்மை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “கட்டுமானப் பணிகளின் போது மெட்ரோ ரயிலுக்காக போடப்பட்ட தூண் சரிந்து விழுந்து தாய் மற்றும் மகன் உயிரிழந்தது மீளாத துயரத்திற்குள்ளாக்கியது.