ஐதராபாத் :அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழா ஜனவரி 22ஆம் தேதி திட்டமிடப்பட்டு உள்ள நிலையில், அதில் கலந்து கொள்வதா? அல்லது புறக்கணிப்பதா? என்பது தான் காங்கிரஸ் மூத்த தலைவர்களின் தற்போதைய தலையாய பிரச்சினையாக காணப்படுகிறது. ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவி கலந்து கொள்வதாக முடிவெடுத்தால், அதனால் சிறுபான்மையின மக்களிடையே இருந்து வரும் விளைவு என்பது உறுதி.
அதேநேரம், பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணித்தால் நாட்டின் பெரும்பான்மை மக்களால் மறுதலிக்கப்படலாம். இப்படி இருதலைக் கொள்ளி போன்று தற்போதைய காங்கிரசின் சூழல் அமைந்து உள்ளதாக காணப்படுகிறது. எதிர்க்கட்சிகளின் தற்போதைய சூழல் என்பது எளிதில் புரிந்து கொள்ளக் கூடியதாக காணப்பட்டாலும், விடை காண்பது எளிதானது அல்ல என்பது தான் நிதர்சனமான உண்மை.
உண்மையை கூற வேண்டும் என்றால் அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவுக்கான அழைப்பிதழ் தங்களுக்கு வந்து விடக் கூடாது என்பதே பல்வேறு காங்கிரஸ் தலைவர்களின் நிலைப்பாடாக இருக்கலாம் என கருதப்படுகிறது. அழைப்பிதழ் அனுப்பாததை காரணம் காட்டி பாஜக கூறித்து பல்வேறு விமர்சனங்களை கூறி கோயில் பிரதிர்ஷ்டை விழாவை அரசியலாக்க திட்டமிட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
முன்னதாக ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவை அரசியலாக்குவதாக கூறி முன்னதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ராமர் கோயில் திறப்பு விழாவை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளனர். மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரிக்கு, விஷ்வ இந்து பரிஷித் அமைப்பின் தலைவர் சார்பில் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்த நிலையில், பாஜகவின் அரசியல் ஆதாயத்திற்கு துணை போக மாட்டோம் எனக் கூறி அவர் புறக்கணித்தார்.
மேலும், மதம் என்பது அவரவர் தனிப்பட்ட விருப்பம் என்றும் ஆனால் அதை தனது அரசியல் எல்கைக்காக பாஜக பயன்படுத்துவதாக டெல்லியில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் சீதாராம் யெச்சூரி தெரிவித்து இருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய வெளியுறவு இணை அமைச்சர் மீனாட்சி லேக்கி, ராமரின் அன்புக்குரியவர்கள் மட்டுமே அயோத்தி கோயில் திறப்பு விழாவில் கலந்து கொள்ள முடியும் என தெரிவித்து இருந்தார்.
ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணிப்பதால் கம்யூனிஸ்ட் கட்சிக்குள் என்றும் பிளவு என்பது ஏற்படப் போவதில்லை. மத எதிர்ப்பு, கடவுள் எதிர்ப்பு உள்ளிட்டவைகளையே தனது அடிப்படை கொள்கைகளாக கொண்டது கம்யூனிஸ்ட் கட்சி. இருப்பினும், மதச்சார்பற்ற கொள்கைகளை மக்களிடையே விதைப்பதில் எது அவர்களுக்கு உதவுகிறது என்றால் பதில் கிடைக்குமா.
இந்தி மொழி பேசும் வடமாநிலங்களில் ராமரை பின் தொடரும் மக்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ள நிலையில், அங்கு கம்யூனிசத்தை பின் தொடரும் அல்லது விரும்பும் மக்களின் எண்ணிக்கை என்பது குறைவாகவும் சில இடங்களில் பூஜ்யமாகவும் உள்ளது. அதேநேரம் கேரளாவில் விதிவிலக்காக ஆட்சி கட்டிலை அலங்கரிக்க இந்தியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட பல்வேறு மதம் சார்ந்த கட்சிகளுடன் கூட்டணி கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி அமைத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறது.
ஆனால் இத்தகைய சூழல் என்பது காங்கிரஸ் கட்சிக்கு சாதாரணமானது அல்ல. ஜனவரி 22ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவில் பங்கேற்பதா? புறக்கணிப்பதா? என்பது குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டிய கட்டாயத்தில் காங்கிரஸ் கட்சி உள்ளது. இந்தி மொழி பேசும் மாநிலங்களில் கம்யூனிஸ்ட் கட்சியை போன்று காங்கிரசுக்கும் செல்வாக்கு இல்லை என்றால் எளிதாக ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவை புறக்கணித்து விடலாம்.
அதேநேரம் உண்மையான மதச் சார்பற்ற உரிமைகளை காங்கிரஸ் பெற்றுக் கொள்ளும். ஆனால் நிலை தற்போது அத்தகைய சூழலுக்கு உகந்ததாக இல்லை. உண்மையான பிரச்சினை என்னவென்றால் அயோத்தி ராமர் கோயில் பிரதிர்ஷ்டை விழாவில் பங்கேற்றால் வட மாநிலங்களில் இஸ்லாமியர்களின் வாக்குகளை பெறுவது என்பது காங்கிரஸ்க்கு சிக்கலை உண்டாக்கும்.