தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 3, 2020, 5:21 PM IST

ETV Bharat / bharat

'பட்டாசுகளை வெடிக்காதீர்கள்' - டெல்லி அமைச்சர் வேண்டுகோள்

டெல்லி: தேசிய தலைநகர் பகுதியில் காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தீபாவளியன்று முடிந்தவரை பட்டாசுகளை வெடிக்க வேண்டாம் என்று டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Delhi minister
Delhi minister

கரோனா ஊரடங்கு காரணமாக டெல்லியில் குறைந்திருந்த காற்று மாசு, கடந்த சில வாரங்களாக மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. காற்று மாசை குறைக்கவும் இது குறித்து மக்களிடையே தேவையான விழிப்புணர்வையும் ஏற்படுத்த அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.

இந்நிலையில், இன்னும் சில நாள்களில் திபாவளி பண்டிக்கை வரவுள்ளது. அப்போது வெடிக்கப்படும் பட்டாசுகளால் காற்று மாசு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. இந்நிலையில், பட்டாசுகளுக்கு எதிரான பரப்புரையை டெல்லி அரசு தற்போது தொடங்கியுள்ளது.

இந்தப் பரப்புரையை தொடங்கி வைத்த டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய், "பசுமை பட்டாசுகளை மட்டுமே டெல்லியில் விற்க வேண்டும் என்று கடந்த 2018ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் பசுமை பட்டாசுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது என்பதை டெல்லி மாசு கட்டுப்பாட்டு வாரியும் உறுதி செய்யும்.

பசுமை பட்டாசுகள் வெடிக்க அனுமதியிருந்தாலும், தற்போதுள்ள காற்று மாசை கருத்தில் கொண்டு பொதுமக்கள் முடிந்தவரை பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும்" என்றார்.

காற்று மாசை குறைக்க வேண்டும் என்பதற்காக பசுமை பட்டாசுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பசுமை பட்டாசுகள் வழக்கமாக பட்டாசுகளைவிட 30 விழுக்காடு குறைவாகவே காற்று மாசை ஏற்படுத்தும்.

டெல்லியில் தீபாவளி மற்றும் குர்பூராப் போன்ற பண்டிகைகளின் போது, இரவு 8 மணி முதல் 10 மணி வரை மட்டுமே மக்கள் பட்டாசுகளை வெடிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அதேபோல கிறிஸ்துமஸ் ஈவ் மற்றும் புத்தாண்டு நாள்களில் இரவு 11:55 மணி முதல் 12:30 மணி வரை அனுமதியளிக்கப்பட்டு உள்ளது.

இதையும் படிங்க: வடக்கு வரை நீளும் மனுஸ்மிருதி பஞ்சாயத்து - அமிதாப் பச்சான் மீது வழக்குப்பதிவு!

ABOUT THE AUTHOR

...view details