திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழாவின் ஹரிபாட் நகராட்சியில் உள்ள வாத்து பண்ணையில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்காரணமாக ஹரிபாட் நகராட்சி முழுவதும் உள்ள பறவைகளை அழிக்கும் பணியை மாவட்ட அதிகாரிகள் தொடங்கினர். முன்னதாக பண்ணையில் உயிரிழந்த பறவைகளின் மாதிரிகளை போபாலில் உள்ள தேசிய உயர் பாதுகாப்பு விலங்கு நோய்கள் ஆய்வு நிறுவனத்துக்கு மாவட்ட நிர்வாகம் அனுப்பியதில் பறவைக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது.
அதைத்தொடரந்து, அக்டோபர் 28ஆம் தேதி முதல் காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பண்ணையிலிருந்து 1 கிமீ சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து பண்ணைகள் மற்றும் வீடுகளில் உள்ள பறவைகளையும் அழிக்க மாவட்ட ஆட்சியர் உத்தவிட்டார். அதன்படி 20,471 பறவைகள் அழிப்பட்டுவருகின்றன. அதற்காக ஆலப்புழா மாவட்ட விலங்குகள் பாதுகாப்பு அலுவலர் டி.எஸ்.பிந்து தலைமையில் தாலா 10 உறுப்பினர்களை கொண்ட குழு அழிக்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது.