தலைநகர் டெல்லி கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. இதன் காரணமாக இதுவரை இல்லாத அளவிற்கு ஒரே நாளில் 395 உயிரிழப்புகள் அங்கு பதிவாகியுள்ளன.
கடந்த 24 மணிநேரத்தில் 73,851 பேருக்கு பரிசோதனை மேற்கொண்ட நிலையில், அதில் 32.82 விழுக்காடு பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதுவரை மாநிலத்தில் 15,772 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 97,977 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.