அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான அகில் கோகாய் 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். வன்முறையைத் தூண்டும் செயலில் ஈடுபட்டதாகக் கூறி சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (உபா சட்டம்) அவர் கைதுசெய்யப்பட்டார்.
அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுதலை
46 வயதான அகில் கோகாய் மீதான வழக்கு விசாரணை கவுஹாத்தி சிறப்பு தேசிய புலனாய்வு நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், அகில் கோகாய் மீதான அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் தள்ளுபடிசெய்து வழக்குகளிலிருந்து அவரை நீதிமன்றம் விடுவித்துள்ளது.