தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நரபலி பூஜைக்காக மகளை பலி கொடுத்த தந்தை! - மகளை நரபலி கொடுக்க தந்தை

அசாம் மாநிலத்தில் நரபலி பூஜைக்காக சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறுமியின் தந்தை உள்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

child's murder
child's murder

By

Published : Aug 12, 2021, 12:41 PM IST

திஸ்பூர்:அசாம் மாநிலம், சிவசாகர் மாவட்டத்தில் நான்கு வயது சிறுமி ஒருவர் ஆகஸ்ட் 8ஆம் தேதி முதல் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பாக, அப்பகுதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதனிடையே, சோனோரி பகுதியில் உள்ள சிலோ ஆற்றங்கரையோரத்தில் சிறுமியின் உடல் மீட்கப்பட்டுள்ளது.

அப்பகுதியில், பூஜை செய்யப்பட்டதற்கான அடையாளங்களும் இருந்தன. இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட். 11) சிறுமியின் தந்தை உள்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறுகையில், "சிறுமி வழக்கு தொடர்பாக, அவரது தந்தையை கைது செய்துள்ளோம். விசாரணையில், அவர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து வருகிறார். அவருக்கு சூனியம் உள்ளிட்ட மூடப்பழக்க வழக்கங்களில் மிகுந்த ஈடுபாடிருப்பது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது" என்றனர்.

இதையும் படிங்க:நரபலி வழக்கு: ஐந்து பேர் கைது

ABOUT THE AUTHOR

...view details