ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆசியாவின் முதல் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை - கட்ச்சில் ஒட்டக மேய்ப்பர்களின் வருவாய் அதிகரிப்பு! - ஒட்டகம் மேய்ப்பவர்களின் வருவாய் அதிகரிப்பு

குஜராத் மாநிலத்தின் கட்ச் மாவட்டத்தில் ஒட்டகப்பாலை பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளதால், அங்கு ஒட்டகப்பால் உற்பத்தி அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டகம் மேய்ப்பவர்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுள்ளதாக தெரிகிறது.

Asia's
Asia's
author img

By

Published : Jan 19, 2023, 2:23 PM IST

கட்ச்: குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில், அமுல் நிறுவனத்தின் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை தொடங்கப்பட்டுள்ளது. இது ஆசியாவின் முதல் ஒட்டகப்பால் பதப்படுத்தும் ஆலை என்று கூறப்படுகிறது. உலகிலேயே பாகிஸ்தான் மற்றும் துபாயில் மட்டுமே ஒட்டகப்பாலை பதப்படுத்தும் ஆலைகள் உள்ளன. அடுத்தபடியாக தற்போது குஜராத் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலை மூலம் கட்ச் பாலைவனத்தில் உள்ள ஒட்டக மேய்ப்பர்கள் மற்றும் ஒட்டகப் பண்ணை வைத்திருப்பவர்களின் வாழ்க்கைத் தரம் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கட்ச் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் வலம்ஜிபாய் ஹொன்பால் கூறும்போது, "கட்ச் மாவட்டத்தில் தற்போது ஒட்டகப்பால் உற்பத்தி சிறப்பாக உள்ளது. மாவட்டத்தில் சர்ஹாத் டெய்ரி, அமுல், சஹ்ஜீவன் உள்ளிட்ட 5 இடங்களில் ஒட்டக பால் சேகரிக்கப்படுகிறது. தினமும் 3,500 முதல் 4,100 லிட்டர் பால் சேகரிக்கப்படுகிறது. ஒட்டகப் பாலுக்கு நல்ல டிமாண்ட் இருப்பதால் இளைஞர்களும் ஒட்டகங்களை வளர்க்கின்றனர். இதனால் ஒட்டகத்தின் விலை 10,000 ரூபாயிலிருந்து சுமார் 40,000 ரூபாயாக அதிகரித்துள்ளது.

கட்ச்சில் சுமார் 180 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள ஒட்டக பால் ஆலையில், ஒட்டகப் பாலில் உள்ள துர்நாற்றத்தை நீக்குகின்றனர். இந்த ஆலை கடந்த சில நாட்களுக்கு முன்பு செயல்படத் தொடங்கியது. இந்த ஆலைக்காக ஒரு லிட்டர் ஒட்டகப் பாலை 51 ரூபாய்க்கு கொள்முதல் செய்வதாக தெரிகிறது. இதனால் ஒட்டகம் வைத்திருப்பவர்களின் வருவாய் அதிகரித்துள்ளது.

ஒட்டகப் பாலில் பல்வேறு நன்மைகள் உள்ளன. ஒட்டகப் பால் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. தற்போது ஒட்டகப்பால் குறித்து விழிப்புணர்வு அதிகரித்துள்ளதால், ஒட்டகப் பால் பொருட்களுக்கான தேவையும் அதிகரித்துள்ளது. எதிர்வரும் நாட்களில் ஒட்டகப்பாலில் இருந்து ஐஸ்கிரீம், சாக்லேட் போன்றவையும் தயார் செய்யப்படும்.

இந்த ஆலை காரணமாக பழைய ஒட்டக மேய்ப்பவர்களும் ஒட்டக வளர்ப்புக்குத் திரும்பியுள்ளனர். கட்ச் மாவட்டத்தில் சுமார் 20 லட்சம் கால்நடைகள் உள்ளன, அவற்றில் 13,000-க்கும் மேற்பட்டவை ஒட்டகங்கள். கட்ச்சில் ஒட்டகங்கள் மேய்ப்பது ஒரு பொழுதுபோக்காகவே இருந்தது. தற்போது அது தொழிலாக மாறியுள்ளது" என்றார்.

இதையும் படிங்க: ரூ. 49,600 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைக்கும் பிரதமர்

ABOUT THE AUTHOR

...view details