டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடியை விமர்சிக்கும் விதமாக போஸ்டர்களை ஒட்டிய 25 பேரைக் கைது அம்மாநில காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்குப் பல தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ள நிலையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தியும் கண்டனத்தைப் பதிவிட்டுள்ளார்.
அந்தப் போஸ்டரில், 'நமது குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளை ஏன் வெளிநாட்டிற்கு அனுப்பினீர்கள் மோடி ஜி?' என்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், இந்த வாசங்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, 'என்னையும் கைது செய்யுங்கள்' என சவால்விடும் தொனியில் கூறியுள்ளார். மேலும் தனது ட்விட்டர் ப்ரொபைல் புகைப்படமாக அந்த வாசகங்களை வைத்துள்ளார்.