தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதிக்கும் ராகுல் - அனுராக் தாகூர் குற்றச்சாட்டு - ஆஸ்திரேலியா

உலக நாடுகளின் தலைவர்களால், பிரதமர் நரேந்திர மோடி புகழப்படுவதை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியால், ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை என்று மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்து உள்ளார்.

Anurag Thakur slams Rahul Gandhi for insulting India during foreign visits
வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதிக்கும் ராகுல் - அனுராக் தாகூர் குற்றச்சாட்டு

By

Published : May 31, 2023, 5:09 PM IST

டெல்லி:ராகுல் காந்தி, தனது வெளிநாட்டு பயணத்தின் போது இந்தியாவை அவமதித்து வருகிறார் என மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டி உள்ளார். பிரதமர் நரேந்திர மோடிக்கு உலகத் தலைவர்கள், பாராட்டுக்களை தெரிவித்து இருப்பதை பார்த்து, ராகுல் காந்தி விரக்தியடைந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரத்தில், வெளிநாடு வாழ் இந்தியர்களின் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி எல்லாவற்றையும் அறிந்தவர் என்று கூறி இருந்தார். ராகுல் காந்தி, தனது ஒவ்வொரு வெளிநாட்டுப் பயணத்தின் போதும், இந்தியாவை அவமதித்து வருகிறார். அதற்கு, அவர் தற்போது மேற்கொண்டுள்ள அமெரிக்க சுற்றுப்பயணத்திலும் அதை செய்ய அவர் தவறவில்லை.

இதையும் படிங்க: கலிபோர்னியாவில் ராகுலுக்கு எதிராக பாஜகவினர் கோஷம்.. கூலாக டீல் செய்த ராகுல்!

அவர் பிரதமர் மோடியை அவமதிக்க நினைக்கிறார், ஆனால், அது, நாட்டை அவமதிப்பதில் முடிகிறது. ராகுல் காந்தி, இந்தியாவை ஒரு நாடாக கருதவில்லை என்பதையும், அது மாநிலங்களின் ஒன்றியம் என்று அவர் நம்புவதாகவே, அவரது செயல்பாடு உள்ளது. ராகுல் காந்தி வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் போதெல்லாம், இந்தியா மற்றும் நாட்டு மக்கள் குறித்து தொடர்ந்து கேள்விகளை எழுப்பி வருவதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.

இதையும் படிங்க: Rahul Gandhi: "பிரதமர் மோடி கடவுளுக்கே வகுப்பு எடுப்பார்" - அமெரிக்காவில் ராகுல் காந்தி விமர்சனம்!

பிரதமர் மோடி, சமீபத்தில் ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது, அந்நாட்டின் பிரதமர் அல்பேனிஸ், பிரதமர் நரேந்திர மோடி தான் பாஸ், என்று கூறியதை, ராகுல் காந்தியால் ஜீரணிக்க முடியவில்லை. அதேபோல், உலகிலேயே மிகவும் பிரபலமான தலைவர் பிரதமர் மோடி தான் என்று இத்தாலி பிரதமர் ஜியார்ஜியா மெலோனி குறிப்பிட்டது.

கடந்த 75 ஆண்டுகளில் இதுவரை நடந்திராத சம்பவமாக, பிரதமர் மோடியின் பாதங்களைத் தொட்டு, பப்புவா நியூ கினியா பிரதமர் வரவேற்ற நிகழ்வுகளை காங்கிரஸ் கட்சியினரால் ஜீரணிக்க முடியவில்லை என்று, அனுராக் தாகூர் தெரிவித்து உள்ளார்.

சான்பிரான்சிஸ்கோ சென்றுள்ள ராகுல் காந்தி, அங்கு ஆற்றிய உரையில், பிரதமர் மோடியை கடவுளுடன் உட்கார வைத்தால், பிரபஞ்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை விளக்கிவிடுவார் என்றும், சிலர் தாங்கள் கடவுளை விட மேலானவர்கள் என்று உறுதியாக நம்புவதாகவும், பிரதமர் மோடி அத்தகைய ஒரு உதாரணம் என்றும் ராகுல் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: பாலியல் குற்றச்சாட்டை நிரூபித்தால் தூக்கில் தொங்க தயார்: பாஜக எம்.பி பிரிஜ் பூஷன் சரண் சிங் ஆவேச பேச்சு!

ABOUT THE AUTHOR

...view details