தமிழ்நாடு

tamil nadu

தகாத உறவை கண்டித்ததால் கணவனுக்கு மயக்க ஊசி போட்டுக்கொன்ற மனைவி

By

Published : Oct 14, 2022, 10:12 PM IST

மகாராஷ்டிராவில் திருமணத்தைத்தாண்டிய உறவினை தட்டிக்கேட்ட கணவனை இரண்டாவது மனைவி மயக்க ஊசி போட்டு கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவை கண்டிட்டதால் கணவனுக்கு மயக்க ஊசி போட்டு கொன்ற இரண்டாவது மனைவி
தகாத உறவை கண்டிட்டதால் கணவனுக்கு மயக்க ஊசி போட்டு கொன்ற இரண்டாவது மனைவி

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் தனது திருமணத்தை மீறிய உறவினை தட்டிக்கேட்ட கணவருக்கு, காதலுனுடன் சேர்ந்து மனைவி மயக்க ஊசி போட்டதால், கணவர் 33 நாள் கோமாவிற்குச்சென்ற பிறகு உயிரிழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

இந்த சம்பவத்தில் உயிரிழந்தவரின் பெயர் சதீஷ் கேசவ்ராவ் தேஷ்முக். இவர் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் தேஷ்முக்கின் மனைவி சுஹாசினி மீது சில நாட்களாகவே தேஷ்முக்கிற்கு சந்தேகம் இருந்து வந்தது. ஒருநாள் அவரது மனைவி மற்றும் அவரது காதலனான அருண் காண்டேகர் ஆகியோர் செப்டம்பர் 10ஆம் தேதி மருத்துவமனையில் இருந்தனர்.

அப்போது அவர்களிடம் இருவருக்கும் இடையே உள்ள உறவு குறித்து கேட்டபோது மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த இடத்தை விட்டு காதலன் வெளியேறிய நிலையில், மனைவி சுஹாசினி தனது கணவருடன் மருத்துவமனையின் கழிவறைக்குச் சென்றுள்ளார். அங்கு காதலனின் உதவியுடன் மயக்க ஊசி போட்டு கணவரை கொல்ல முயன்றுள்ளார்.

இதனால் 33 நாட்கள் கோமாவில் இருந்த தேஷ்முக் நேற்று சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து தேஷ்முக்கின் மகனான பரீக்ஷித் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவித்ததை அடுத்து, காவல் துறையினர் வழக்குப்பதிவு தலைமறைவாக உள்ள சுஹாசினி மற்றும் அருண் காண்டேகரைத் தேடி வருகின்றனர்.

இதில், தேஷ்முக்கின் முதல் மனைவி, தேஷ்முக்கிற்கு சுஹாசினியுடன் இருந்த தகாத உறவால் சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தற்கொலைக்குத் தூண்டிய குற்றத்தில், டாக்டர் தேஷ்முக் ஆறு ஆண்டுகள் சிறையிலும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:பரங்கிமலை கொலை வழக்கு... வாக்குமூலத்தில் திடுக்கிடும் தகவல்கள்...

ABOUT THE AUTHOR

...view details