தமிழ்நாடு

tamil nadu

By

Published : Jun 28, 2021, 1:39 PM IST

ETV Bharat / bharat

'நோ இன்டர்வியூ' - ஆந்திர அரசு அதிரடி

ஆந்திர மாநிலத்தில் குரூப்1 பதவிகள் உள்பட அனைத்து அரசுப் பணிகளுக்கும் இனி நேர்முகத் தேர்வு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெகன்மோகன்
முதலமைச்சர் ஜெகன்மோகன்

அமராவதி: ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம் (APPSC)அனைத்து அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வையும் ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசு வேலைவாய்ப்பு ஆள்சேர்ப்பு பணியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இந்த பரிந்துரையின் அடிப்படையில் குரூப்1 பதவிகள் உள்பட அனைத்து அரசுப் பணிகளுக்கும் இனி நேர்முகத் தேர்வு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஜெகன்மோகன்

தேர்வு நடைமுறையின் மீதான நம்பகத்தன்மையும் வெளிப்படைத்தன்மையும் உறுதி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி விண்ணப்பதாரர்கள் தேர்வில் பெறும் தகுதியின் அடிப்படையில் மட்டுமே பணியில் அமர்த்தப்படுவார்கள்.

இதையும் படிங்க: புதிய டிஜிபி யார்... சின்ஹாவா, சைலேந்திரபாபுவா? - டெல்லியில் இன்று ஆலோசனை

ABOUT THE AUTHOR

...view details