அமராவதி: ஆந்திர அரசு பணியாளர் தேர்வாணையம் (APPSC)அனைத்து அரசு பணிகளுக்கான நேர்முகத் தேர்வையும் ரத்து செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. அரசு வேலைவாய்ப்பு ஆள்சேர்ப்பு பணியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதற்கு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த பரிந்துரையின் அடிப்படையில் குரூப்1 பதவிகள் உள்பட அனைத்து அரசுப் பணிகளுக்கும் இனி நேர்முகத் தேர்வு இல்லை என்று அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் அறிவித்துள்ளார்.