தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆந்திராவில் கோயில் சிலைகள் சேதம் குறித்து விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு அமைப்பு! - சிறப்பு விசாரணைக் குழு

ஆந்திராவிலுள்ள கோயில்கள் மீதான தாக்குதல் குறித்து, விசாரணை நடத்த அம்மாநில அரசு சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர அரசு
ஆந்திர அரசு

By

Published : Jan 9, 2021, 1:10 PM IST

அமராவதி:ஆந்திராவில் கோயில் சிலைகள், உடமைகள் மீதான தாக்குதல்கள் குறித்து விசாரணை நடத்த ஐபிஎஸ் அதிகாரி ஜி.வி. அசோக் குமார் தலைமையில் 16 பேர் கொண்ட சிறப்புக் குழுவினை அமைத்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தக் குழுவானது கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நடைபெற்ற கோயில் மீதான தாக்குதல் குறித்த குற்றச்சம்பவங்கள் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளது.

மேலும், இக்குழுவுக்கு தேவையான அனைத்து உதவிகளையும், தடவியல் நிபுணர் குழு மற்றும் சிஐடி செய்யும் எனத் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், குற்றச்சம்பவங்கள் நடைபெற்ற மாவட்டங்களின் காவல் கண்காணிப்பாளர்களுடன் ஒருங்கிணைந்து இதுபோன்ற குற்றச்சம்பங்கள் தொடர்பான விசாரணையை சிறப்பு குழுத் தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ராமர் தீர்த்தத்தில் உள்ள கோயில் சிலையை அடையாளம் தெரியாத நபர்கள் சேதப்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில், இந்த உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:நட்சத்திர விடுதியில் கும்மாளம்'- கூண்டோடு சிக்கிய ஆன்லைன் மோசடி கும்பல்!

ABOUT THE AUTHOR

...view details