தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - இஸ்லாமிய மதகுரு போக்சோவில் கைது - ஜார்கண்ட்

உருது மொழி படிக்க வந்த 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த இஸ்லாமிய மத குருவை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

By

Published : Dec 12, 2022, 8:34 PM IST

சிமெடிகா(ஜார்க்கண்ட்):ஜார்க்கண்ட் மாநிலம், சிமெடிகா பகுதியைச் சார்ந்த தம்பதி போலீசில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது, தம்பதியின் 8 வயது மகள், வீட்டின் அருகில் உள்ள மதரஸா பள்ளியில் உருது படிக்கச் சென்றதாகவும், அங்கு இமாமாக(இஸ்லாமிய மத குரு) உள்ள அமீன் என்பவர் சிறுமியை தனியாக அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் குறித்து வெளியே சொல்லக்கூடாது என சிறுமியை, இமாம் மிரட்டியதாகவும் சொல்லப்படுகிறது. வீட்டிற்கு வந்த சிறுமி தனக்கு நடந்தவற்றை பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். வன்கொடுமை குறித்து சிறுமியின் உறவினர்கள் தட்டிக் கேட்டதற்கு, இமாம் அமீன் கண்டுகொள்ளவில்லை எனக்கூறப்படுகிறது.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில் இமாம் அமீனை போக்சோ சட்டத்தில் கைது செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க:சாமிக்கு பிடிக்கும் குடை துர்கா ஸ்டாலினுக்கு பிடிக்கப்பட்டதா? - சமூக வலைதளங்களில் வைரலான வீடியோ

ABOUT THE AUTHOR

...view details