தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஆயுதப்படை வீரர்களுக்கு ஆயுஷ்மான் காப்பீட்டுத் திட்டம்; தொடங்கிவைத்தார் அமித்ஷா - ஆயுதப்படை வீரர்களுக்கு காப்பீட்டுத் திட்டம்

நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருந்து காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

அமித்ஷா
அமித்ஷா

By

Published : Jan 24, 2021, 10:34 AM IST

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 125ஆவது பிறந்தநாள் விழா நேற்று(ஜன. 23) கொண்டாடப்பட்டது. இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஆயுதப்படை வீரர்களுக்கான காப்பீட்டுத் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

அதன்படி, நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் ஆயுதப்படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இலவச மருந்து காப்பீட்டுத் திட்டம் அளிக்கப்படவுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பேர் பயனடைவார்கள்.

இவர்கள் நாடு முழுவதும் உள்ள 24 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். மத்திய ஆயுதப்படையின் கீழ் உள்ள ஏழு படைப் பிரிவுகளுக்கு இந்த திட்டம் பொருந்தும். சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை தொடங்கிவைப்பது மிகவும் நெகிழ்ச்சியானது என அமித்ஷா கூறினார்.

இதையும் படிங்க:கைக்குழந்தையுடன் தவித்த தாயை 6 கிமீ சுமந்து சென்ற ராணுவ வீரர்கள்!

ABOUT THE AUTHOR

...view details