தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

நாகாலாந்து என்சிபி எம்எல்ஏக்கள் 7 பேரும் அஜித்பவாருக்கு ஆதரவு - அதிர்ச்சியில் சரத்பவார் அணி! - அஜித்பவார்

நாகாலாந்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஏழு பேரும் அஜித்பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் சரத்பவார் அணியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

Nagaland
சரத்பவார்

By

Published : Jul 21, 2023, 12:54 PM IST

நாகாலாந்து:சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்த, அவரது சகோதரர் மகன் அஜித்பவார் அண்மையில் அக்கட்சியிலிருந்து விலகினார். பின்னர், தனது 8 ஆதரவு எம்எல்ஏக்களுடன் மகாராஷ்ட்ராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசில் இணைந்தார். இதனால், தேசியவாத காங்கிரஸ் கட்சி இரண்டாக உடைந்தது. இதையடுத்து, கடந்த ஜூலை 2ஆம் தேதி மகாராஷ்ட்ராவின் துணை முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அவரது ஆதரவு எம்எல்ஏக்களும் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அமைச்சரவையில் இடம் பிடித்தனர்.

தேசியவாத காங்கிரஸ் கட்சி இரு அணிகளாக பிரிந்துவிட்டதால், கட்சியைக் கைப்பற்றும் வேலைகளிலும் அஜித்பவார் ஈடுபட்டு வருகிறார். தாங்கள்தான் உண்மையான தேசியவாத காங்கிரஸ் கட்சி என்றும், தனக்கு 40 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகவும் அஜித்பவார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே தேசியவாத காங்கிரசிலிருந்து விலகி பாஜக கூட்டணியில் சேர்ந்து அமைச்சர்களாக பதவியேற்ற அனைவரும் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக சரத்பவார் அறிவித்தார். அமைச்சர்களாக பதவி ஏற்ற அனைவரையும் தகுதி நீக்கம் செய்யக் கோரியும் மகாராஷ்டிர சபாநாயகரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: Monsoon session: எதிர்கட்சிகளின் தொடர் அமளியால் நாள் முழுவதும் மக்களவை ஒத்தி வைப்பு!

இதனிடையே கடந்த 16ஆம் தேதி அஜித் பவார் ஆதரவு எம்எல்ஏக்கள் 8 பேரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாரை நேரில் சந்தித்தனர். அவர்கள் சரத்பவாரை சமாதானப்படுத்த முயற்சித்ததாகவும் கூறப்பட்டது. ஆனால், ஒருபோதும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என சரத்பவார் திட்டவட்டமாக கூறியதாக தெரிகிறது.

இந்த நிலையில், நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 7 பேரும் அஜித்பவார் அணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அஜித்பவாருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர். தேசியவாத காங்கிரசின் நாகாலாந்து மாநில தலைவர் ஒடியோவும் இதனை உறுதி செய்துள்ளார்.

நாகாலாந்தில் உள்ள தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ஏற்கனவே அங்குள்ள பாஜக கூட்டணி அரசுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இப்போது, மகாராஷ்ட்ராவில் உள்ள பாஜக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். நாகாலாந்து தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அஜித்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளது சரத்பவார் அணியினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கட்சி இரண்டாக உடைந்ததால் ஏற்கனவே சரத்பவார் தரப்புக்கு பின்னடைவாக உள்ள நிலையில், தற்போது மேலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சரத் பவாருடன் மீண்டும் சந்திப்பு.. 24 மணி நேரத்தில் 2வது முறை! அஜித் பவார் திட்டம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details