தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 27, 2021, 1:23 PM IST

ETV Bharat / bharat

நாடாளுமன்ற கண்ணியத்தை அனைத்து உறுப்பினர்களும் காக்க வேண்டும் - குடியரசுத் தலைவர் அறிவுரை

ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கருத்து வேறுபாடு இருந்தாலும் அனைவரும் நாடாளுமன்ற கண்ணியத்தை காக்க வேண்டும் என குடியரசுத் தலைவர் அறிவுறுத்தியுள்ளார்.

President Ram Nath Kovind
President Ram Nath Kovind

அரசியலமைப்பு தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந் நாடாளுமன்ற மைய வளாகத்தில் உரையாற்றினார். அப்போது அவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவைகளின் கண்ணியத்தை காக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

உரையில் அவர் கூறியதாவது: "நமது நாடாளுமன்றம் நாட்டின் ஜனநாயக அமைப்பின் உச்சத்தில் உள்ளது. அனைத்து உறுப்பினர்களும் இங்கு கூடி சட்டங்களை இயற்றுவதுடன் பொது நலன் தொடர்பான பிரச்சனைகளையும் விவாதிக்கின்றனர்.

உண்மையில், கிராம சபை, சட்டப்பேரவை மற்றும் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கு ஒரே முன்னுரிமை இருக்க வேண்டும். அந்த முன்னுரிமையானது, அவர்களின் தொகுதிகளைச் சேர்ந்த அனைத்து மக்களின் நலனுக்காகவும், தேசத்தின் நலனுக்காகவும் பணியாற்றுவதில் உள்ளது.

மக்கள் நலனே பிரதானம்

கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். ஆனால் மக்கள் சேவையின் உண்மையான நோக்கத்திற்கு இடையூறாக அந்த வேறுபாடுகள் இருக்கக்கூடாது. ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் போட்டியிடுவது இயல்பானது. ஆனால் இந்தப் போட்டி சிறந்த பிரதிநிதிகளாக, பொது நலனுக்காக சிறந்த செயல்களை செய்வதாகற்காக இருக்க வேண்டும். அப்போதுதான் ஆரோக்கியமான போட்டியாக கருதப்படும்.

நமது நாடாளுமன்றத்தை ஒரு 'ஜனநாயகக் கோவில்' என்று நாம் அனைவரும் நம்புகிறோம். எனவே, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் தங்கள் வழிபாட்டுத் தலங்களில் எப்படி மரியாதையுடன் நடந்து கொள்கிறார்களோ, அதே உணர்வோடு இந்த ஜனநாயகக் கோவிலிலும் நடந்து கொள்வது அவர்களின் பொறுப்பாகும்.

எதிர்க்கட்சியின் முக்கியத்துவம்

உண்மையில் எதிர்க்கட்சி என்பது ஜனநாயகத்தின் மிக முக்கியமான அங்கம் என தெரிவித்தார். திறமையான எதிர்க்கட்சி இல்லாமல், ஜனநாயகம் செயலிழந்துவிடும். அரசாங்கமும் எதிர்க்கட்சியும் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும், குடிமக்களின் நலன்களுக்காக தொடர்ந்து இணைந்து செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.

மேலும், நமது அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கியவர்கள் இதை முன்வைத்தே சட்டம் இயற்றியிருக்கிறார்கள். இது தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கு இந்த செயல்பாடு அவசியமாகும்." இவ்வாறு அவர் பேசினார்.

இதையும் படிங்க:வரதட்சணை பணத்தை பெண்கள் கல்விக்காகச் செலவழித்த மணப்பெண்

ABOUT THE AUTHOR

...view details