தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 27, 2022, 9:09 PM IST

ETV Bharat / bharat

51வது அகில இந்திய மேயர்கள் மாநாடு ராய்பூரில் தொடக்கம்...

51வது அகில இந்திய மேயர்கள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் தொடங்கியது. நாளை வரை இந்த மாநாடு நடக்கவுள்ளது.

mayor
mayor

ராய்ப்பூர்: 51வது அகில இந்திய மேயர்கள் மாநாடு சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூரில் இன்று(ஆக.27) தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த கூட்டத்தில், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 48 மேயர்கள் கலந்து கொண்டனர்.

சத்தீஸ்கர் முதலமைச்சர் புபேஷ் பாகல் மற்றும் சத்தீஸ்கர் மாநில அரசு அதிகாரிகளும் கலந்து கொண்டனர். நாளைய மாநாட்டில் ஆளுநர், எம்பிக்கள் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக மேயர்கள் மாநாட்டிற்காக ராய்ப்பூர் வந்த மேயர்கள் நேற்று(ஆக.26), கௌசல்யா மாதா கோவிலுக்கு சென்றனர். மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தின் உணவு வகைகளையும் சுவைத்து மகிழ்ந்தனர்.

இதையும் படிங்க:ராஜஸ்தானில் மாணவர் சங்க தேர்தல்... காலில் விழுந்து ஓட்டு சேகரித்த மாணவர்கள்...

ABOUT THE AUTHOR

...view details