உத்தரப் பிரதேச மாநில தலைநகரான லக்னோவில் உள்ள ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் உயிருள்ள நோயாளி ஒருவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம், நோயாளியின் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்துவிட்டதால் அவர் இறந்துவிட்டார். அவரது உடலை தகனம் செய்ய உறவினர்கள் கேட்டதால் அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது என தெரிவித்தது.
சலேநகரில் வசிக்கும் சுகானி கவுதம் என்ற பெண் உடல்நலக் குறைவு காரணமாக சமீபத்தில் ராம் மனோகர் லோஹியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பரிசோதனை செய்ததில் கரோனா தொற்று இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆனால் அவருக்கு சுவாசப் பிரச்னை இருந்துள்ளது.