தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

போலி மதுபானத்தினால் உயிரிழந்த 11 பேர்

லக்னோ: போலி மதுபானங்களை அருந்திய லாரி ஓட்டுநர்கள் 11 பேர் உயிரிழந்தனர்.

By

Published : May 28, 2021, 2:48 PM IST

11 பேர் உயிரிழப்பு
11 பேர் உயிரிழப்பு

உத்தரப்பிரதேச மாநிலம், அலிகார் மாவட்டத்தில் மதுபானங்களை விற்பனை செய்ய உரிமம் பெற்றவரால் விற்கப்பட்ட போலி மதுபானங்களை குடித்தவர்களில் 11 பேர் உயிரிழந்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து காவல் துறையினர் கூறியதாவது; 'போலி மதுபானங்களை குடித்து உயிரிழந்தவர்கள் அனைவரும் லாரி ஓட்டுநர்கள் ஆவர். இவர்கள் அலிகார்-தபால் நெடுஞ்சாலையில் ஒரு எரிவாயு கிடங்கில் வேலைக்காக கூடியிருந்தனர்.

அந்த மதுக்கடையில் உள்ள மதுபானங்கள் அனைத்திலும் சோதனை மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. பின்னர் கடைக்குச் சீல் வைக்கப்பட்டுள்ளது' எனத் தெரிவித்தனர்.

தற்போது இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

ABOUT THE AUTHOR

...view details