பாராமதி (புனே) :ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பவார் குடும்பத்தினர் பொதுமக்களைச் சந்தித்துக் கொண்டாடுவர்.
கடந்த ஆண்டு கரோனா பரவலால் கொண்டாடவில்லை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பவார் குடும்பத்தினர் பொதுமக்களுடன் தீபாவளியை இன்று (நவ.5) கொண்டாடினர்.
கரோனா பரவல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க இந்தாண்டு பவாரின் கோவிந்த்பாக் இல்லத்திற்கு பதிலாக அப்பாசாகேப் பவார் மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.