தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 5, 2021, 7:09 PM IST

ETV Bharat / bharat

மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவாருக்கு கரோனா அறிகுறி

பாராமதியில் நடைபெற்ற தீபாவளி நிகழ்ச்சியில் மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய நிலையில், அஜித் பவாருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் கலந்து கொள்ளவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கமளித்தார்.

மகாராஷ்ரா துணை முதலமைச்சர்
மகாராஷ்ரா துணை முதலமைச்சர்

பாராமதி (புனே) :ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை பவார் குடும்பத்தினர் பொதுமக்களைச் சந்தித்துக் கொண்டாடுவர்.

கடந்த ஆண்டு கரோனா பரவலால் கொண்டாடவில்லை. தற்போது கரோனா பாதிப்பு குறைந்து வருவதால், பவார் குடும்பத்தினர் பொதுமக்களுடன் தீபாவளியை இன்று (நவ.5) கொண்டாடினர்.

கரோனா பரவல், தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்க இந்தாண்டு பவாரின் கோவிந்த்பாக் இல்லத்திற்கு பதிலாக அப்பாசாகேப் பவார் மண்டபத்தில் நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

தீபாவளி நிகழ்ச்சி

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்ரா துணை முதலமைச்சர் அஜித் பவார் கலந்து கொள்ளாதது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அப்போது அஜித் பவாருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால் கலந்து கொள்ளவில்லை என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் விளக்கமளித்தார்.

மேலும், அஜித் பவாரின் கார் ஓட்டுநர், வீட்டு உதவியாளர்கள் இருவர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதால், நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மகாராஷ்ர மாநில அமைச்சர்கள், கட்சி உறுப்பினர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: முதல்முறையாக முல்லைப்பெரியாறு அணையில் நான்கு அமைச்சர்கள் ஆய்வு!

ABOUT THE AUTHOR

...view details