தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

குஜராத்தில் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு - அமெரிக்காவில் ஆங்கிலேமே தெரியாமல் சிக்கிய மாணவர்களால் வெளிவந்த உண்மை! - அமெரிக்காவில் சிக்கிய குஜராத் மாணவர்கள்

அமெரிக்காவில் ஆங்கிலேமே தெரியாமல் குஜராத் மாணவர்கள் சிக்கியதன் தொடர்ச்சியாக, குஜராத்தில் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Gujarat
Gujarat

By

Published : Aug 2, 2022, 9:37 PM IST

குஜராத்:கடந்த மார்ச் மாதம் கனடாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குஜராத்தைச் சேர்ந்த 6 இளைஞர்களை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்தனர். அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, நீதிமன்றத்தில் ஆங்கிலத்தில் உரையாட முடியாமல் விழிபிதுங்கி நின்றனர்.

இதுகுறித்து விசாரணை நடத்தியதில், அவர்கள் ஆங்கில திறனறிவு தேர்வான ஐஇஎல்டிஎஸ் (IELTS)-ல் 6.5 முதல் 7 வரை மதிப்பெண்கள் பெற்றிருந்தது தெரியவந்தது. ஆங்கிலம் பேசத் தடுமாறிய மாணவர்கள், ஆங்கிலப் புலமை தேர்வில் அதிகளவு மதிப்பெண்கள் பெற்று எப்படி கனடா வந்தார்கள்? என்ற குழப்பம் ஏற்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடத்தும்படி அமெரிக்க அதிகாரிகள் கோரிக்கை விடுத்ததன் பேரில், குஜராத் மாநிலத்தின் மெஹ்சானா மாவட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

முதற்கட்ட விசாரணையில் குஜராத்தில் ஐஇஎல்டிஎஸ் தேர்வில் முறைகேடு நடைபெற்றதும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடத்தப்பட்ட தேர்வில், தேர்வறையில் சிசிடிவி கேமராக்கள் அணைத்து வைக்கப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:"எனக்கு தெரியாமலேயே என் வீட்டில் பணம் வைக்கப்பட்டுள்ளது" - கைதான நடிகை அர்பிதா முகர்ஜி பேட்டி!

ABOUT THE AUTHOR

...view details