போபால்: மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூர் பகுதியில் எட்டு வயதில் காணாமல் போன சிறுவன், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு ஆதார் கார்டு உதவியால் பெற்றோரிடம் சேர்ந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமர்த் டாம்லே என்பவர் நாக்பூரில் அனாதை விடுதி நடத்தி வந்துள்ளார். அவரிடம் 10 ஆண்டுகளுக்கு முன்பு, ரயில்வே நிலையத்தில் தனியாக இருந்த சிறுவனை காவல் துறையினர் அழைத்து வந்துள்ளனர். அச்சிறுவனுக்கு மனநல பாதிக்கப்பட்டு, சரியாக பேச முடியாத நிலையில் இருந்துள்ளான். அவன் அம்மா அம்மா என மட்டுமே பேசிக் கொண்டிருந்ததால், டாம்லே அச்சிறுவனுக்கு ‘அமன்’ எனப் பெயரிட்டு வளர்த்து வந்துள்ளார்.
2005இல் அனாதை இல்லம் மூடப்பட்டதால், அமனை தனது வீட்டிற்கு டாம்லே அழைத்து வந்துள்ளார். தனது குடும்ப உறுப்பினர் போல் கவனித்து வந்துள்ளார்.